Wednesday, January 5, 2011

காப்பீடு கட்டாயம்

இன்றைய அவசர உலகில் யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவரை நம்பி குடும்பம் இருக்கிறது என்கிற போது அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்துக்கு கை கொடுப்பதுதான் காப்பீடு..!
* ஒருவர் மொத்தம் மூன்று விதமான காப்பீடுகள் எடுப்பது அவசியமாகிறது. அவை ஆயுள், விபத்து, ஆரோக்கிய காப்பீடு என்பதாக இருக்கிறது. வாகனம் வைத்திருப்பவர்கள் கூடுதலாக மோட்டார் பாலிசியும் எடுத்துக் கொள்வது அவசியம்.

ஆயுள் காப்பீடு:
* எவ்வளவு தொகைக்கு ஆயுள் பாலிசி எடுக்க வேண்டும் என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கிறது. பொதுவாக, ஒருவரின் ஆண்டு சம்பளத்தை போல் 10 மடங்கு தொகைக்கு பாலிசி எடுத்து வேண்டும். உதாரணத்துக்கு ஒருவரின் மாதச் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் என்றால் அவரின் ஆண்டு சம்பளம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். அவர் 24 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுப்பதுதான் சரியாக இருக்கும். 
* குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் டேர்ம் பிளான்கள் சிறந்தது.

விபத்து காப்பீடு
* பர்சனல் ஆக்சிடென்ட் பாலிசி என்கிற தனி நபர் பாலிசியை அனைவரும் எடுப்பது அவசியம். இது விபத்து எதிலாவது சிக்கி உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதாக இருக்கும். இந்த பாலிசியில் 1 லட்ச ரூபாய் கவரேஜ்&க்கு 100 ரூபாய்தான் பிரீமியம். இதை ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் பாலிசியுடன் ரைடர் பாலிசி என்ற துணை பாலிசியாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது பொது காப்பீட்டு (ஜெனரல் இன்ஷூரன்ஸ்) நிறுவனங்களில் தனி பாலிசியாக எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் 1 லட்ச ரூபாய் கவரேஜ்&க்கு 100 ரூபாய்தான் பிரீமியம்.

மெடிக்ளைம்:
* விபத்து அல்லது உடல் நலப் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்ந்து எடுக்கும் சிகிச்சைக்கான செலவை திரும்பப் பெறுவதாக இந்த பாலிசி இருக்கிறது. மெடிக்ளைம் பாலிசியில் கவரேஜ் இரு பிரிவாக இருக்கிறது. முதல் பிரிவு மருத்துவக் காப்பீடு. இதில், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தங்கி எடுத்துக் கொள்ளும் சிகிச்சை மற்றும் அதனை ஒட்டிய செலவுகள் அடங்கும். 
இரண்டாவது பிரிவு, கிரிட்டிக்கல் இல்னஸ் என்கிற தீவிர நோய் பாதிப்புக்கான (புற்றுநோய், சிறுநீரக செயல் 
இழப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை) செலவுகள் அடங்கும். இந்த இரண்டுக்கும் தனித் தனியாக பிரீமியம் கட்ட வேண்டி வரும்.

வாகன காப்பீடு
* இரு சக்கர வாகனம் அல்லது கார் வைத்திருப்பவர்கள் இந்த பாலிசியை எடுப்பது கட்டாயம். இதில், தேர்ட் பார்ட்டி பாலிசி, (மூன்றாம் நபருக்கு ஏற்படும் பாதிப்புக்கான இழப்பீடு), ஓன் டேமேஜ் (வாகனத்தின் உரிமையாளரே வாகனத்துக்கு சேதம் ஏற்படுத்துவதற்கான இழப்பீடு) என இரு பாலிசிகள் இருக்கின்றன. இதில், தேர்ட் பார்ட்டி பாலிசி சட்டப்படி எடுக்கப்பட வேண்டும். 
பாலிசி எப்படி எடுப்பது?
* உங்களை சுற்றியே ஏராளமான இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்கள் இருப்பார்கள். அவர்களிடம் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் அருகிலுள்ள காப்பீடு நிறுவனங்களின் கிளையை அணுகினால் போதும்.
தேவையான ஆவணங்கள்
* லைஃப் இன்ஷூரன்ஸ், விபத்து, மெடிக்ளைம் பாலிசி எடுக்க & வயதுக்கான ஆதாரம் (பள்ளி, கல்லூரி சான்றிதழ், பாஸ் போர்ட் போன்றவை), அதிக தொகைக்கு பாலிசி எடுக்கும் போது புகைப்படம் மற்றும் வருமானத்துக்கான ஆதாரம் தேவைப்படும்.
* மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்க ஆர்.சி புத்தகத்தின் நகல், அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரம்

யார் பெயரில் பாலிசி?

காப்பீடு என்பது சம்பாதிக்கும் நபருக்குதான் எடுக்க வேண்டும். பலர் தங்கள் பெயரில் குறைவான தொகைக்கும் மனைவி பெயரில் அதிக தொகைக்கும் பாலிசி எடுக்கிறார்கள். பாசத்தை மனைவி மீது வையுங்கள். பாலிசியை உங்கள் பெயரில் வையுங்கள். உதாரணத்துக்கு ஒருவர் தன் பெயரில் 2 லட்ச ரூபாய்க்கும், மனைவி பெயரில் 5 லட்ச ரூபாய்க்கும் பாலிசி எடுத்திருந்தார் என்று வைத்துக் கொள்வோம். திடீர் விபத்தில் கணவர் மேலே போய் சேர்ந்துவிட, குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய்தான் இழப்பீடு கிடைக்கும். அதிக தொகைக்கு கணவர்தன் பெயரில் எடுத்திருந்தால் கூடுதல் தொகை குடும்பத்துக்கு கிடைத்திருக்கும். அதே நேரத்தில், பணிபுரியும் மனைவியாக இருந்தால் அவர் பெயரில் தனியாக பாலிசி எடுப்பது மிகஅவசியம்.

No comments:

Post a Comment